ஒரு குற்றச்சாட்டு . ஒரு சுய விளக்கம்

Tuesday, 26 April 2011


யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற இந்த கட்டுரை முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனை யே.

ஏன் சொல்கிறேன் என்றால் அம்பி மாமா ஏப்பம் விடுவதை அவரே நீண்ட நாட்களாக பார்கவில்லை காரணம் அவர் அஜீரணத்தில் அவதி பட்டு கொண்டு இருக்கிறார் .

இரண்டாவதாக அவர் லாங் வாக் போகிறார் என்ற குற்றச்சாட்டு . அவரால் அரை கிலோமீட்டர் நடந்தாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அண்டா கவுந்து அல்வா தொங்கி விடுபவர் . அதனால் வெறும் மிக மிக சின்ன வாக் தான் செல்கிறார். காரணம் தொப்பை . இதற்கு சாட்சி இன்னொரு தொப்பை மாமா வசந்த் .

பெரும்பாலும் அவர் மனதில் பட்டதை அந்த இடத்திலேயே சீரியஸ் ஆக சொல்வார். அனால் அது காமெடி ஆக புரிந்துபடுவது அவர் பிறவி பயன் அல்லது பிறவி துர்பாக்கியம் என்று நினைப்பவர் .

நான்கவதாக அம்பி ஒரு வெள்ளை மனது உடையவர் மற்றும் கள்ளம் கபடம் இல்லாதவர் . அதனால் படுத்தால் ஆனது தூங்கி விடுபவர் ( வீட்டில் தான் ). தற்போது மனைவி வீட்டில் இல்லாததால் விடிய காலையில் எழுப்பி விட யாரும் இல்லாதவர் . ( அம்மா செல்லம் என்பதால் அம்மாவிற்கு ஒரு போதும் எழுப்பி விட மனம் வருவதில்லை ). இந்த நிலையில் அவர் ஓரிரண்டு நாட்கள் கொஞ்சம் லேட் ஆக வருவதுண்டு அனால் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடும் அளவு செகண்ட் ஷிபிட் வலைக்கு வருவது இல்லை.

அதானால் தான் சொல்கிறேன் , இந்த கட்டுரை முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனை யே.

1 comments:

Unknown said...

Absolutely fine Ganesh.. accepted the fact !!!! Good thought here! Such a spontaneous reply! Good one!

Post a Comment